Tuesday, December 22, 2009

மொழி பிரச்னை

நம் தமிழ்நாட்டில் ஹிந்தியை எதிர்த்து பல போரட்டங்கள் நடத்தினார்கள், அதனால் இன்று அந்த துன்பத்தை நம் அனுபவிக்கிறோம். பிழைப்பதற்காக வேறு ஊருக்கு செல்லும் நம் மக்கள் ஹிந்தி தெரியாமல் எவ்வளவு சிரமபடுகிரர்கள் என்று எல்லோருக்கும் தெரியும். ஒரு இடத்திற்கு போக வலி கூட கேட்க தெரியாமல் மிகவும் சிரமபடுகிரர்கள்.

நான் மும்பை வரும் பொழுது என்னுடன் ஏழு பேரு வந்தார்கள். எங்களில் சில பேருக்கு ஹிந்தி தெரியும். அதனால் ஓரளவு எங்களால் சமாளிக்க முடிந்தது.
நாங்கள் ஒன்றாக வராமல் தனியாக வந்திருந்தால் எங்களால் கண்டிப்பாக சமாளித்து இருக்க முடியாது. மொழி தெரியாதலால் வீடு எடுத்து தங்க நங்கள் இரண்டு மாத வாடகை இடைதரக்ர்கு குடுக்க வேண்டியதாக போயிற்று. எங்களால் அவர்களுடன் பேரம் பேச முடியவில்லை.

வேலை செய்யும் இடத்திலும் மொழி தெரியம் மிகவும் சிரமப்பட்டோம். ஒரு கடைக்கு பொய் ஒரு பொருள் வாங்க வேண்டும் என்றால் ஹிந்தியில் பெயர் தெரியாமல் அதை தேடி கண்டுபிடித்து அதற்கு சைகையில் விலை கேட்டு வாங்கவேண்டும். கடைகாரர்க்கு இங்கிலீஷ் தெரிதிருன்த்தால் இங்கிலிஷில் விலை கேட்டு பொருள் வாங்கலாம் , ஆனால் அவனுக்கு இங்கிலீஷ் தெரியவில்லை என்றல் நம் படு திண்டாட்டம் தான். நல்ல வேலை நம் தலைவர்கள் ஆங்கிலத்தை எதிர்த்து போராடவில்லை , போராடீருந்தால் நம் அனைவரும் தமிழ்நாட்டில் மட்டும் உட்கார்திருக்க வேண்டும்.

ஆன்று எதிர்த்தவர்கள் பிர்கலத்தை பற்றி யோசிக்காமல் அரசியல் லாபத்திற்காக நம்மை பயன்படுதிக் கொண்டார்கள். அதனால் நாமாவது நமது குழந்தைகளை தமிழ், ஆங்கிலம் இவற்றோடு இல்லாமல் ஹிந்தி கற்று கொடுப்போம். இதனால் ஹிந்தி தெரியாமல் நாம் படும் கஷ்டத்தை அவர்கள் பட மாட்டார்கள்.

Wednesday, November 25, 2009

தொடர்பில் இருக்க

ரொம்ப நாளாக என்ன எழுதுவது என்று யோசித்து கொண்டு இருந்தேன். நெடில் எல்லா ப்லோகுககுகும் சென்று படித்து கொண்டு இருந்தேன் . எல்லா ப்ளாக் பார்க்கும் பொழுது மிகவும் ஆச்சிரியமாக இருகின்றது. குறிப்பாக பிருந்தாவனமும் , நொந்தகுமார... பார்க்கும் பொழுது எனக்கும் தொடர்ச்சியாக எழுத வேண்டும் என்று ஆவல் அதிகமாகிவிட்டது. மேலும் நிலாமகள் ப்ளாக் நாள் எழுத தொடங்குவதற்கு முக்கிய காரணமாகும். இந்த ப்ளாக் படித்து விட்டு தான் நானும் எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது. அதற்கு நிலாமகளுக்கு எனது நன்றிகள்.

இனி வாரம் ஒரு முறையாவது ஒரு ப்ளாக் எழத வேண்டும் என்று முடிவு எடுத்து உள்ளேன். முடிந்தவரையில் அந்த வாரம் என்ன நடந்ததோ அதை பற்றி எழுதலாம் என்று நினைத்து இருக்கிறேன். நேரம் கிடிக்குமா என்று தெரியவில்லை.

வேறு நிறுவனத்திற்கு செல்வதால் நான் பார்த்து கொண்டு இருந்த வேலைகளை மற்றவர்களுக்கு முடிந்தவரையில் திணித்து விட்டு சென்றுவிடலாம் என்று முயற்சி சித்து கொண்டு இருகிறேன். ஆனால் இங்கு இருந்து சுலபமாக விடுதலை வங்கி கொண்டு செல்ல முடியாது போல் இருகின்றது.

முடிந்த வரையில் வேலை மாற்றிக்கொண்டு சென்னை வந்து விடலாம் என்று நினைகின்றேன் , ஆனால் நடக்குமா என்று ஒரு வித தயக்கம் இருந்துகொண்டு தான் இருகின்றது.


இத்துடன் இந்த ப்ளாக் முடித்து கொள்கிறேன். இரவு 11 . மணி ஆகுவதால் அலுவலகத்தை விட்டு வீட்டிற்கு கிளம்புகிறேன்.

Friday, September 25, 2009

என்று மாறும் ஜாதி பணம் சார்த்த படிப்பு.

படிப்பு சம்பந்தமாக என்னுடைய சில கருத்து வேறுபாடுகள்.

அந்த காலத்தில் கீழ் ஜாதி மக்கள் ஏழைகளாக இருந்தார்கள்.அவர்களால் படிக்க முடியவில்லை ,மேல் ஜாதி மக்கள் அவர்களுக்கு கல்வி மறுத்தார்கள்.அவர்களை படிக்க வைக்க வேண்டும் என்று ஜாதி வைத்து பிரித்தார்கள். ஆனால் இன்று அப்படி இல்லை. ஏழைகளாக உயர் ஜாதி மக்களும் கீழ் ஜாதி மக்களும் இருகீறார்கள்.

படிப்பு என்பது ஜாதி இல்லாத படிப்புஆகா இருக்க வேண்டும். பள்ளி முதல் கல்லூரி வரை எல்லா நிலைகளிலும் ஜாதி சான்றிதல் கட்டயமாக கருதபடிகிறது.12 ஆம் வகுப்பு முடித்ததும் கல்லூரியில் செறுவதற்கு ஜாதி முலம் மதிபெண் நிர்நியக்க படுகிறது.

நன்றாக படிக்கும் ஒரு உயர் ஜாதி மாணவனுக்கு மதிபெண் இருந்தும் கல்வி மறுக்க படிக்கிறது. அவன் பணகரனாக இருந்தால் நல்ல கல்லூரியில் சேர்த்து படிப்பான், ஆனால் அவன் ஏழையாக இருந்தால் அவனுடைய கனுவுகள் என்ன ஆவது. ஒரு மதிபெண்ணில் மருத்துவ படிப்பை இலக்க வாய்ப்பு உண்டு. ஆனால் அவனைவிட குறைந்த மதிபெண் பெரூபவர்கள் டாக்டர் அக வாய்ப்பு இருக்கிறது. அவன் செய்த பிழை உயர் ஜாதியில் ஏழையாக பிறந்தது.

ஏழையாக யாராக இருந்தாலும் அவர்களுக்கு அரசாங்கம் உதவி செய்து படிக்க வைக்க வேண்டும். ஆனால் அதை விட்டுவிட்டு கீழ் ஜாதி யாக இருந்தால் மதிபெண் தேவை இல்லை என்பது அபத்தமாக இருக்கிறது. அரசாங்கம் படிப்பை ஜாதி வைத்து பிரிக்காமல் மதிபெண் அடிப்படையில் கல்லூரியில் இடம் குடுத்தால் நன்றாக இருக்கும்.

இது என்னுடைய தனி பட்ட சொந்த கருத்தாகும். இந்த கருத்து தவறாகவும் இருக்கலாம்.

என்னை பற்றி சில வரிகளில்.

நான் ஸ்ரீனிவாசன், செல்வி தம்பதிக்கு jan-5,1984 இரண்டாவது மகனாய் பிறந்தேன்.
அப்பா அம்மா வின் செல்லத்தால் வளர்க்கபட்டேன். பெற்றோர்களின் கனவு என்னை டாக்டர் ஆக்கி பார்ப்பது, இருந்த போதும் என்னால் B.Tech(I.T). தான் சிரமப்பட்டு படிக்க முடிந்தது. படித்து முடித்து சென்னை மாநகரில் வேலை தேடி அலைந்து ஒரு வருத்திற்கு பிறகு மும்பாயில் 2006 அம் ஆண்டு சாப்ட்வேர் கம்பென்யில் வேலை கிடைத்தது. இப்பொழுதும் முன்று வருடங்களாக அந்த கம்பென்யில் இருந்து வருகிறேன்.

ப்லோக்எழுதலாம் என்று பல நாளாக நினைத்து கொண்டு இருந்தேன். எதை வைத்து ஆரம்பிப்பது என்று ஒரு தயக்கம். அதனால் என்னை பற்றி கொஞ்சம் சொல்லி ஆரம்பிக்கலாம் என்று ஆரம்பிக்கிறேன். எனது தமிழ் எழுத்து பிழை யுடன் இருக்கும். ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்கவும்.